திடீரென நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து விட்டதாலோ என்னவோ அதிரடியாய் தோன்றிய சிந்தனைகளை ட்விட்டரில் கீச்சுகளாய் போட்டிருந்தேன்.. அத்தனையும் மரம் பற்றியவை.. அவைகளின் தொகுப்பு இங்கே உங்களுக்காக...
***********************************************************************
***********************************************************************
மனித வாழ்வின் நிலையாமை குறித்த புத்தகத்தை மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்
***********************************************************************
இன்னும்கூட எழுத்தாளர்கள் காகிதத்தில்
சைன்ஸ்பிஷன்ஸ் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
காகிதங்கள் சொல்லாத கதைகள் ஆயிரம் ஒரு மரத்தின் கனத்த மௌனம் சொல்லும்
***********************************************************************
ஒரு மரத்தை வெட்டும்போது ஓடிவராத மற்ற மரங்களாலேயே அழிந்தது ஒரு வனம்
ஒரு மரத்தை வெட்டும்போது ஓடிவராத மற்ற மரங்களாலேயே அழிந்தது ஒரு வனம்
***********************************************************************
இலையை பறித்த பின் கிளையை சரித்த பின் மரத்தை அழித்த பின்னும் ஏன் வனத்தை அழித்த பின்னும்கூட பொறுமைக்கு உதாரணமாக சொல்லிக்கொண்டிருப்பார்கள் சிலர்
***********************************************************************
பெருந்தோப்புக்குள் இருந்தாலும் அதுவும் தனி மரமே!
பெருந்தோப்புக்குள் இருந்தாலும் அதுவும் தனி மரமே!
ஏவாள் கடித்த ஆப்பிளின் மரத்திற்கு விதை போட்டது யார் ???

***********************************************************************
மரம் குறித்து என்னால் எப்போதும் நேர்கோட்டில் சிந்திக்க முடிவதில்லை

ட்விட்டரில் தொடர :
https://twitter.com/mayakannan









No comments:
Post a Comment